இலங்கையில் கொரோனாவின் ஆதிக்கம் தொடர்ந்து வரும் நிலையில் சற்று முன்னதாக மேலும் நூற்றுக் கணக்கானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் மேலும் 337 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சற்று முன்னதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்று உறுதியான அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை