இலங்கையில் கொரோனாத் தொற்று சமூக மட்டத்தில் இருந்து அலுவலக மட்டத்தில் புகுந்துள்ள நிலையில் சுகாதார அமைச்சுக்குள்ளும் புகுந்து பலரை தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளது.
சுகாதார அமைச்சை சேர்ந்த பணிக்குழாமினர் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புபட்டிருந்த 70 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை