நீர்கொழும்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உள்ளிட்ட 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீர்கொழும்பில் மேலும் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் நால்வர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நீர்கொழும்பு தொற்று 523 ஆக அதிகரித்துள்ளது.
நீர்கொழும்பு கட்டுவ பேஸ்லைன் சாலையில் அமைந்துள்ள பெட்டெஸ்டா புனர்வாழ்வு மையத்தில் இருந்து நேற்று முன்தினம் மேலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 100 ஆக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை