Friday 29th of March 2024 05:57:04 AM GMT

LANGUAGE - TAMIL
-
வடக்கில் கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்க ஏற்பாடு!

வடக்கில் கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்க ஏற்பாடு!


கறுப்புக்கொடிகளுடன் வந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று இந்திய மீனவர்கள் அறிவித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கில் கதவடைப்புப் போராட்டம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமானத்தினரால் இன்று முன்னெடுக்கப்பட்ட பொதுக் கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள், வெகுஜன அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள், மாவட்ட சம்மேளனத்தின் அனைத்து சமாசங்கள் உட்பட்ட பிரதிநிதிகளுடன் முன்னெடுக்கவுள்ள கலந்துரையாடலை அடுத்து கதவடைப்பு குறித்த திகதி தீர்மானிக்கப்படும் என்று சங்கப் பிரதிநிதிகள் அருவியின் பிராந்திய செய்தியாளருக்கு தெரிவித்தனர்.

நெடுந்தீவுக் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரின் படகினை மோதி படகு கவிழ்ந்ததில் இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE