Thursday 25th of April 2024 02:25:53 AM GMT

LANGUAGE - TAMIL
கோப்பு படம்!
திருகோணமலை துறைமுகத்திற்கு சீமெந்து ஏற்றிச் சென்ற கப்பல் பாறைதட்டியது!

திருகோணமலை துறைமுகத்திற்கு சீமெந்து ஏற்றிச் சென்ற கப்பல் பாறைதட்டியது!


அபுதாபியில் இருந்து திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிச் சென்ற எம்.வி யுரோசன் கப்பல், சின்ன இராவணன் கோட்டை கடலில் பாறை தட்டியது.

இதன்போது, கப்பலில் 18 பணிக்குழாமினர் இருந்துள்ளதாகவும் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் குறித்த கப்பல் திருகோணமலை துறைமுகத்தை சென்றடையவிருந்த நிலையில் இவ்வாறு பாறை தட்டியுள்ளது.

எவ்வாறாயினும், சின்ன இராவணன் கோட்டை கடலில் பாறை தட்டிய கப்பலை கண்காணிப்பதற்காக கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE