அமெரிக்காவில் ஒரே நாளில் 2 இலட்சத்தை அண்மித்த தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த தொற்றுறுதி 2.5 கோடியை கடந்துள்ளது.
அமெரிக்காவில் நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 92 ஆயிரத்து 65 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து அமெரிக்காவின் மொத்த தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 2.5 கோடியைக் கடந்து 2 கோடியே 53 இலட்சத்து 90 ஆயிரத்து 42 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் 3 ஆயிரத்து 886 பேர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 4 இலட்சத்து 24 ஆயிரத்து 177 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா