2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன.
இந்த தகவலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;
2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்மொழிவுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரப்பட்டுள்ளது.
அபிவிருத்தித் திட்டங்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடாக மார்ச் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அமைய அவர்கள் தமது முன்மொழிகளை சமர்ப்பிக்க முடியும் - என்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்