Thursday 18th of April 2024 09:17:03 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.பரிசோதனைக்கூடம்; இந்திய மீனவர் உட்பட்ட மூவருக்கு தொற்றுறுதி!

யாழ்.பரிசோதனைக்கூடம்; இந்திய மீனவர் உட்பட்ட மூவருக்கு தொற்றுறுதி!


யாழ்ப்பாணம் காரைநகர் கடற்படைத்தளத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 09 பேரில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று யாழ்.போதனா வைத்தியசாலை பரிசோதனைக் கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் ஒன்பது பேரும் நாளை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவிருந்த நிலையிலேயே இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நாளை இந்திய மீனவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படும் நடவடிக்கை ஒத்திவைக்கப்படக்கூடும் என்று தெரியவருகிறது.

இதேவேளை இன்று யாழ்.போதனா வைத்தியசாலை பரிசோதனைக் கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் இருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE