இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 283 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவர், மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவர், மற்றும பூஜாபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை