உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை நெருங்கியுள்ளது.
இன்று காலை வரையான உத்தியோகபூா்வ தரவுகளின் பிரகாரம் 9 கோடி 97 இலட்சத்து 55 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையும் 2 மில்லியனைக் கடந்துள்ளது. இன்று காலை வரையான தரவுளின்படி 21 இலட்சத்து 38 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் அதிர்ச்சியூட்டும் வகையில் கட்டுப்பாடின்றி மிக மோசமாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அத்துடன், உயிரிழப்புக்களும் தினசரி ஆயிரக்கணக்கில் பதிவாகி வருகின்றன.
அமெரிக்காவில் இதுவரை 2 கோடி 57 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 இலட்சத்து 29 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக அதிக தொற்று நோயாளர்கள் பதிவான நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் இதுவரை 1 கோடி 66 இலட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 1 இலட்சத்து 53 ஆயிரத்தக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலில் கிட்டத்தட்ட 90 இலட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 2 இலட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரணங்களுக்கு பதிவாகியுள்ளன.
2 மில்லியனுக்கும் அதிகமான தொற்று நோயாளர்களைக் கொண்ட ஏனைய நாடுகள் வருமாறு,
ரஷ்யா: 3,679,247
பிரிட்டன்: 3,657,857
பிரான்ஸ்: 3,112,055
ஸ்பெயின்: 2,499,560
இத்தாலி: 2,466,813
துருக்கி: 2,429,605
ஜேர்மனி: 2,147,814
இந்நிலையில் கோவிட்19 தடுப்பூசிகள் உலகளாவிய தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவரக்கூடும் என உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.
எனினும் இந்த 50 நாடுகளில் இரண்டைத் தவிர ஏனைய அனைத்தும் செல்வந்த அல்லது நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் எனவும் அதானோம் கெப்ரேயஸ் கூட்டிக்காட்டினார்.
தடுப்பூசிகள் அவசரமாகவும் சமமான அளவிலும் அனைவருக்கும் பகிரப்பட வேண்டும். நாங்கள் உலகளாவிய ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து கொரோனாவுடன் போராட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்