ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பாபண்டாரவும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஆறாவது உறுப்பினர் இவர் ஆவார்.
இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த ஆகியோரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனிடையே தயாசிறி ஜயசேகர மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக அரசாங்கத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.