Friday 19th of April 2024 05:28:43 PM GMT

LANGUAGE - TAMIL
-
டெல்லியைத் தொடர்ந்து மும்பையை  முற்றுகையிட்டுள்ள விவசாயிகள்!

டெல்லியைத் தொடர்ந்து மும்பையை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள்!


இந்திய மத்திய அரசின் சர்ச்சைக்குரிய மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு இடம்பெற்றுவரும் விவசாயிகளின் போராட்டம் மும்பையிலும் விரிவடைகிறது.

டெல்லியில் இடம்பெறும் போராட்டத்தில் பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளே பெருமளவில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், தென் மாநிலமான மகாராஷ்டிராவில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இன்று பெருமளவில் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இன்று அவா்கள் ஒன்றுகூடியுள்ளனர்.

இதற்காக, மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாக மும்பை நோக்கி வாகனப் பேரணியாக வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் இன்று இந்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மும்பை ஆசாத் மைதானத்தில் ஒன்றுகூடி கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்தவுள்ளனர். தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்குச் சென்று தமது கோரிக்கையை வலியுறுத்தும் மகஜரைக் கையளிக்கவுள்ளனர்.

இதேவேளை, விவசாயிகளின் போராட்டம் காரணமாக முப்பையில் வன்முறைகள் ஏதும் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக ஆயிரக்கணக்கில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டள்ளன.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE