நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ள கன்னாட்டி அ.த.க.பாடசாலை விரைவில் திறக்க வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா ஒருங்கிணைப்பு குழு தலைவருமான க. திலீபன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக கல்வி திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
அக்கிராம மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நேரில் ஆராய சென்றபோதே மக்கள் குறித்த விடயம் தொடர்பில் தெரிவித்ததை அடுத்தே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா