யாழ் சிவில் சமூகத்தினரின் ஏற்பாட்டில் யாழ் நகரில் இன்றைய தினம் தமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
எதிர்வரும் மாதம் ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ் கட்சிகள் பக்கசார்பாக செயற்பட்டு வருவதாகவும் குறிப்பாக ஜெனிவாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட கடத்தல் கொலை விடயங்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயம் கட்டாயமாக சுட்டிக் காட்டப்பட வேண்டும் எனவும்
எனினும் அந்த விடயம் தொடர்பில் தமிழ் கட்சிகள் எந்தவித கரிசனையும் செலுத்துவது இல்லை எனவும் எனவே இந்த நாட்டில் தமிழ் கட்சிகள் ஜனநாயக ரீதியாக செயல்படவில்லை என தெரிவித்து தமிழ் கட்சிகள் தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாகவும் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்