சுகாதாரமான கிளிநொச்சி எனும் தொனிப் பொருளில் கிளிநொச்சி றொட்டறிக்கழகத்தினால் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இன்றைய நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்கள் பதவிநிலை அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் இந்த செயற்திட்டத்தில் பங்குகொண்டனர்.
தன்னார்வத்துடன் இயங்குகின்ற இளைஞர் குழுமத்திற்கு அரசாங்க அதிபர் இதன்போது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் அவர்கள் தமது பணியினை சிறப்புற முன்னெடுத்துச் செல்வதற்கான முழுமையான ஆதரவினை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி