யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை கடற்படைத் தளத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் மூவருக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழியச் சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கி மல்லாகம் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாட்டுப் படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அவர்கள் எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமையால் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் மூவரும் இன்று மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அவர்களின் படகு உட்பட்ட பொருட்களை கையளிப்பது தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.