Saturday 20th of April 2024 07:01:30 AM GMT

LANGUAGE - TAMIL
.
யாழ். ஆய்வுகூட பரிசோதனை: எழுதுமட்டுவாழில் சிக்கிய நால்வர் உள்ளிட்ட பன்னிருவருக்கு தொற்றுறுதி!

யாழ். ஆய்வுகூட பரிசோதனை: எழுதுமட்டுவாழில் சிக்கிய நால்வர் உள்ளிட்ட பன்னிருவருக்கு தொற்றுறுதி!


யாழ். ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாழ் மாவட்டத்திற்குள் பிரவேசித்த பாவூர்தி சேவை வாகனங்களின் பணியாளர்களில் நால்வர் உள்ளிட்ட பன்னிருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்திற்குள் நுழையும் வாகனதாரரிடம் பிசிஆர் பரிசோதனைக்கு உரிய மாதிரிகள் பெறப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பெறப்பட்டிருந்த மாதிரிகளும் நேற்றைய யாழ். ஆய்வுகூட பரிசோதனையில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு நேற்றைய (25) தினம் யாழ். பல்கலைக் கழக மருத்துவபீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் என்பவற்றில் முன்னெடுக்கப்பட்டிருந்த பரிசோதனையில் 758 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் பன்னிருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் ஐவருக்கும், வவுனியா, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஒவ்வொருவருக்கும் என வட மாகாணத்தை சேர்ந்த எண்மருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் உள்ளவர்களில் நால்வருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீட மாணவன் ஒருவருக்Nகு கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதுதவிர, எழுதுமட்டுவாழ் பகுதியில் பெறப்பட்டிருந்த மாதிரிகளின் அடிப்படையில் பாரவூர்திகள் சேவை வாகன பணியாளர்கள் நால்வருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE