உலக அளவில் கொரோனாத் தொற்றின் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளது.
சற்று முன்னர் வெளியாகியுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் உலக அளவில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 10 கோடியே 3 இலட்சத்து 86 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அதேபோல உலக அளவில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 இலட்சத்து 53ஆயிரத்தைக் கடந்துள்ளது. 70 கோடிப் பேர் முழுமையான குணடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாத் தொற்றினால் அதிகமான பாதிக்கப்பட்டநாடாக அமெரிக்கா காணப்படுகின்றது. அமெரிக்காவில் 2 கோடியே 58 இலட்சம் பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. 4 இலட்சத்து 31 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் ஒரு கோடியே 6 இலட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 2இலட்சத்து 17 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
பிறேசிலில் 88 இலட்சம் பேருக்கு தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ரஸ்யாவில் 37 இலட்சம் பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. 70 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐக்கிய இராச்சியத்தில் 36 இலட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 98 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸில் 30 இலட்சம் பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. 73 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில் 26 இலட்சம் பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. 56 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்..
இத்தாலியில் 24 இலட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 85 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியில் 24 ஆயிரம் பேருக்கு தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜேர்மனியில் 24 இலட்சம் பேருக்கு தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 53 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில் 7இலட்சத்து 53 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 19 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் 59 ஆயிரத்து 167 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன் 287 பேர் உயிரிழந்துள்ளனர். 50 ஆயிரத்து 337 பேர் முழுமையான குணமடைந்துள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்