அபுதாபியில் இருந்து திருகோணமலை துறைமுகத்திற்கு சீமெந்து உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளை ஏற்றிவந்த போது சின்ன இராவணண் கோட்டை கடற்பரப்பில் பாறை தட்டிய எம்.வி.யுரோசன் கப்பலின் கீழ் பகுதியில் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு அம்பாந்தோட்டை கடற்பரப்பில் சின்ன இராவணண் கோட்டை பகுதியில் பாறை தட்டிய எம்.வீ.யுரோசன் கப்பல் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணையை கடற்படையின் சுழியோடி குழுவுடன் இணைந்து இலங்கை கடற்படையினர் முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது, குறித்த கப்பலின் பின்பகுதியில் இருந்து 70 மீட்டர் அளவான பகுதி பாறை தட்டியுள்ளதாக தெரியவந்துள்ளதாக தெரிவித்த கடற்படையினர், எனினும் நீரோட்டத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக கப்பல் பாறையில் இருந்து விலகியுள்ளதாக குறித்த விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
லைபிரியாவின் கொடியின் கீழ் அபுதாபி துறைமுகத்தில் இருந்து திருகோணமமலை துறைமுகத்திற்கு சீமெந்து உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்தப்படும் க்ளின்கர் மூலபொருளை ஏற்றி வந்த குறித்த கப்பல் கடந்த 22 ஆம் திகதி பிற்பகல் சின்ன இராவணண் கோட்டை பகுதியில் பாறை தட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை