Friday 29th of March 2024 05:26:39 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் 290 ஆக உயர்ந்தது கொரோனாச் சாவு!

இலங்கையில் 290 ஆக உயர்ந்தது கொரோனாச் சாவு!


இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் இருவர் பலியாகியுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

கொழும்பு 15 மற்றும் ஹொரணை − கோனபொல பகுதிகளைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு 15 ஐச் சேர்ந்த 43 வயதான ஆண் ஒருவர், ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

ஹொரணை − கோனபொல பகுதியைச் சேர்ந்த 74 வயதான பெண் ஒருவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதன்படி நாட்டில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 277 பேர் கொரோனாவின் மூன்றாவது அலையில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE