ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் தீக்குளித்து உயிர்நீத்த தியாகி முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத் தூபி முன்பாக நினைவு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.
இறுதி யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டிய போது போர் நிறுத்தப்பட்டு போர் வலயத்தில் சிக்குண்டிருந்த ஈழத்தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட ஈழத்தமிழர் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சாஸ்திரி பாவன் முன்பாக கடந்த 29.01.2009 அன்று 'வீரத் தமிழ்மகன்' முத்துக்குமார் தீக்குளித்து உயிர் நீத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை, தமிழ்நாடு, சென்னை, யாழ்ப்பாணம்