அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலாதான், விரைவில் அதிமுகவை மீட்டெடுப்போம் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்தியா கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது,
ஒரு வாரம் ஓய்வெடுத்த பின்பு சசிகலா, பெங்களூருவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்ல உள்ளார். அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தும் உரிமை சசிகலாவுக்கு உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலா தான். பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்கு உள்ளது. ஜனநாயக முறைப்படி அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. அ.தி.மு.க.வை மீட்டெடுக்க தான் அ.ம.மு.க. உருவாக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, பெங்களூர், சென்னை