Thursday 28th of March 2024 07:59:39 PM GMT

LANGUAGE - TAMIL
-
அம்பாறையில் தாயும் பிள்ளையும் குத்திக்கொலை!

அம்பாறையில் தாயும் பிள்ளையும் குத்திக்கொலை!


அம்பாறை மாவட்டம் – அம்பலன் ஓயா, தமன்ன பகுதியில் தாயும் அவரது 10 வயதான பிள்ளையும் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டுக்குள் வைத்து கூரிய ஆயுதத்தால் குத்தி இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரின் சடலங்களும் இன்று காலை வீட்டிலிருந்து மீட்கப்பட்டன.

உயிரிழந்த பெண் 33 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இரட்டை படுகொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. கொலையாளிகளும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE