இலங்கை அரசானது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதை கண்டித்து திருகோணமலை துறைமுக அதிகாரசபையின் ஊழியர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை துறைமுக அதிகாரசபையின் வாயிலில் ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பேரணியாக ஒன்று திரண்டு திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி வரை சென்று கோஷமிட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இலங்கை அரசானது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை மாத்திரமல்லாது தெற்கு பகுதியினைக்கூட தாரை வார்ப்பதற்கு தயாராகிவருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை