Thursday 28th of March 2024 11:34:33 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஓவம் விளையாட்டுக் கழகம் நடத்திய மென்பந்து கிரிகெட் சுற்றுப் போட்டியில்  மருதம் warries அணி சம்பியனானது!

ஓவம் விளையாட்டுக் கழகம் நடத்திய மென்பந்து கிரிகெட் சுற்றுப் போட்டியில் மருதம் warries அணி சம்பியனானது!


வவுனியா, ஓமந்தை அரச உத்தியோகத்தர் குடியிருப்பில் அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட, ஓவம் விளையாட்டுக்கழகம், தனது முதல் கிரிகெட் சுற்றுப்போட்டியை சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறது.

ஓவம் விளையாட்டுக்கழகம், தனது உறுப்பினர்களிடையே மருதம் warriors, முல்லை wings, நெய்தல் bulls, குறிஞ்சி kings ஆகிய 4 அணிகளை அமைத்து லீக் போட்டிகளை கடந்த இரண்டு வாரங்களாக நடத்தி வந்தது.

நடைபெற்ற 09 போட்டிகளின் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு மருதம் warriors மற்றும் குறிஞ்சி kings ஆகிய அணிகள் தெரிவாகின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் மருதம் warriors சம்பியனானது.

சிறந்த பந்துவீச்சாளராக மருதம் warriors ஆர்.சஜீபன், சிறந்த துடுப்பாட்டக்காரராக குறிஞ்சி kings அணியின் கப்ரன் கு.நித்திலன், சிறந்த களத்தடுப்பாளராக முல்லை wings அணியின் பா.தமிழ்வாணன், சிறந்த வளர்ந்துவரும் வீரராக நெய்தல் bulls அணியின் எஸ்.உஜாந், தொடராட்ட நாயகனாக ஆர்.ஜெனோஜன் தெரிவாகி விருதளிக்கப்பட்டனர்.

சாம்பியன் அணி வீரர்கள் அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு நிகழ்ச்சியில், கழக ஒழுங்கமைப்பாளர்களான தமிழருவி த.சிவகுமாரன், மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபரும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவருமான குணபாலன், கழகத்தலைவர் சு.வரதகுமார், அனுசரணையாளர்களில் ஒருவரான மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் கே.ரொஜான், கழகத்தின் பொருளாளர் ம.லக்ஷ்மன்ராஜ்,கழகத்தின் செயலாளர் கு.நித்திலன் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன.

மைதானத்தை துரிதமாக அபிவிருத்தி செய்ய உதவிய ம.சிவனேசன்,க.சுகந்தன்,ம.சிவகுமார் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE