பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனுக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை ஆரம்பிக்கப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்வதை தடுக்கும் நோக்கில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கு எதிராக பெற்றுக் கொண்ட தடையுத்தரவினை வழங்குவதற்காக அவரின் வீட்டிற்கு முல்லைத்தீவு பொலிசார் இன்று சென்றுள்ளனர்.
நீதிமன்றத் தடையுத்தரவுடன் பொலிசார் சென்றபோது வீட்டில் ரவிகரன் இருந்திருக்கவில்லை. இதனால் பொலிசார் அங்கிருந்து திருப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு