வட மகாகாண ஆளுநர் கலந்துகொண்ட சுதந்திர தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் குறித்த நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றது.
அதிதிகளை பான்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்துவரப்பட்டதை தொடர்ந்து தேசிய கொடி ஏற்றப்பட்டது. தேசிய கொடியினை வடமாகாண ஆளுநர் ஏற்றி வைத்ததுடன் தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் இசைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மத தலைவர்களின் ஆசி இடம்பெற்றதுடன், வடமாகாண ஆளுநர் உரையாற்றினார். குறித்த நிகழ்வில் மத தலைவர்க்ள், வட மகாகாண ஆளுநர் பி.எச்.எம் சார்ள்ஸ், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பொலிஸ் உயர் அதிகாரிகள், முப்படையினர், திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், கிளிநொச்சி