கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மாலபே நெவில் பெர்னாண்டோ பொது வைத்தியசாலையின் நிறுவுனர் வைத்தியர் நெவில் பெர்னாண்டோ சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான இவர் மாலபே நெவில் பெர்னாண்டோ பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு ஐடிஎச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக கொவிட்-19 தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு