வடக்கு கிழக்கு தமிழ் சிவில் சமூகத்தினரின் ஏற்பாட்டில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்டு வரும் நீதி கோரும் பேரணியின் 3ஆவது நாள் மக்கள் எழுச்சி பயணம் சற்று முன்னதாக திருகோணமலையில் ஆரம்பித்துள்ளது.
மட்டக்களப்பு தாளங்குடாவில் ஆரம்பித்த நேற்றைய பேரணி திருகோணமலையில் நிறைவு பெற்றிருந்த நிலையில் திருகோணமலை மடத்தடி சிவன் கோவில் முன்றலில் இருந்து சற்று முன்னதாக ஆரம்பமாகியுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், திருகோணமலை