கொழும்பு - சுதந்திர சதுக்கத்தில் நடந்த சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் ஊடகவியலாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்வில் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அதற்காக விண்ணப்பித்த அச்சு, இலத்திரனியல் ஊடகங்களைச் சோ்ந்த சுமார் 200 ஊடகவியலாளர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவா்களில் தொற்று உறுதி செய்யப்பட்ட 18 பேரும் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்பட்டனர். எதிர்மறையாக சோதனை முடிவு வந்தவர்கள் மட்டுமே சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.
Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு