யேமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட செளதி அரேபியா தலைமையிலான கூட்டணிக்கு இதுவரை வழங்கி வந்த ஆதரவை நிறுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
யேமனில் கடந்த ஆறு வருடங்களாக நடந்து வரும் போரில் கிட்டதட்ட ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் இருந்த வெளியுறவுக் கொள்கைகளின் மாற்றங்களை ஏற்படுத்திவரும் ஜோ பைடன், யேமன் போர் நிறுத்தப்படவேண்டும் என தனது முதல் கொள்ளை விளக்க உரையிலேயே வலியுறுத்தினார்.
ட்ரம்பிற்கு முன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமா காலத்தில் யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட செளதி அரேபியா தலைமையிலான கூட்டணிக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கியது.
இந்தப் போரால் மில்லியன் கணக்கான யேமன் மக்களை பசிக் கொடுமையில் சிக்கித் தவிக்க நேரிட்டது.
2014ஆம் அண்டு யேமன் அரசு மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்குமான போர் தொடங்கியது. அதன்பின் அமெரிக்கா, பிரட்டன், பிரான்ஸின் ஆதரவில் செளதி அரேபியா மற்றும் எட்டு பிற அரபு நாடுகள் இந்த சண்டையில் ஈடுபட்டபின் போர் தீவிரமானது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இவ்வாறான நிலையிலேயே யேமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட செளதி அரேபியா தலைமையிலான கூட்டணிக்கு இதுவரை வழங்கிவந்த ஆதரவை நிறுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
பைடனின் நிர்வாகம் செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆயுதங்கள் விற்பதை ஏற்கனவே தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த புதிய முடிவை மேற்குலக நாடுகளின் ராஜதந்திரிகள் மற்றும் யேமன் மக்கள் வரவேற்றுள்ளனர்.