பொத்துவிலில் தொடங்கிய பேரணி மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களை கடந்த நிலையில் கிளிநொச்சியை சென்றடைந்துள்ளது.
வெள்ளாங்குளத்திலிருந்து மாங்குளம், திருமுறிகண்டி, இரணைமடுச் சந்தி ஊடாக சென்ற பேரணி கிளிநொச்சி டிப்போ சந்திப்பகுதியில் நிறைவடைந்தது.
அதன் பின்னர் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அண்மையில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உறவுளின் போராட்டம் நடைபெற்ற பகுதிக்குச் சென்ற போராட்ட ஏற்பாட்டாளர்கள் அந்த மக்களை சந்தித்து உரையாடியதுடன், ஏற்பாட்டாளர்களில் ஒருவரான வேலன் சுவாமி நீராகாரம் வழங்கி போராட்டத்தை முடித்துவைத்தார்.
அதன் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலையை வலியுறுத்திப் போராடிவருபவர்களையும் பேரணி ஏற்பாட்டாளர்கள் சந்தித்தித்துக் கலந்துரையாடினர்.
போராட்டம் நாளை காலை யாழ்ப்பாணம் நோக்கி நகரும்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி