பொத்துவிலில் தொடங்கி பொலிகண்டியில் நிறைவடைந்த உணர்வெழுச்சிப் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் கனடாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் திரண்டு பேரணியில் பங்கேற்றுள்ளன.
கனடியத் தமிழர் சமூகம், கனடியத் தமிழ் மாணவர் சமூகம் என்பன இணைந்து குறித்த போராட்டத்துக்கு அழைப்புவிடுத்திருந்தன.
இதற்கமைய தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பேரணியில் பங்கெடுத்திருக்கின்றன.
வாகனத் தொடரணி பயணிக்கும் விபரம்,
மார்க்கம்/ ஸ்ரில் மதியம்12 மணி - 416 662 2326
பிரம்ரன் மதியம் 12 மணி shoppers world - 437 332-3862
மிஸ்ஸிஸசாகா மதியம் 12 மணி city centre - 416 791 7678
அஜக்ஸ் நியூ ஸ்பசிலாண்ட் மதியம் 12 மணி - 289 200 2029
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி போராட்டத்தில் பங்கேற்குமாறு ஏற்பாட்டுக்குழு அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.