கிளிநொச்சி யூனியன் குளம் பாடசாலைக்கான அதிபரை நியமிக்க கோரி பாடசாலை நுளைவாயிலை மூடி இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி கல்விவலயத்திற்கு உட்பட்ட மிகவும் பின் தங்கிய கிராமத்தில் அமைந்துள்ள யுனியன் குளம் பாடசாலைக்கு கடந்த 8 வருடங்களுக்கு மேலாக நிரந்தர அதிபர்கள் எவரும் நியமிக்க்படாமல் இருப்பதனால் மாணவர்களின் கல்வி முதற்கொண்டு பாடசாலை அபிவிருத்தி சார்விடயங்களிலும் பின்தங்கி காணப்படுவதாக ஏற்கனவே பெற்றோர்களால் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டு கோரிக்கை கடிதங்கள் அனுப்பட்ட போதும் இதுவரை அதிபர்கள் எவரும் நியமிக்கபடவில்லை.
இந்த நிலையில் இன்று காலை இப் பாடசாலைக்கு நிரந்தர அதிபரை நியமிக்க கோரி பெற்றோர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களால் கவனயீர்ப்பபு போராட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது.
இன்று காலை பாடசாலை ஆரம்ப நேரத்தில் பாடசாலை நுளைவாயிலை மூடி குறித்த பேராட்டம் முன்னெடுக்கபட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன்கலந்துரையாடி தற்காலிகமாக அதிபர் ஒருவரை நியமிப்பதாக உறுதி அளித்தததை அடுத்து போராட்டம் முடிவிற்க்கு கொண்டுவரப்பட்டது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி