Friday 29th of March 2024 10:54:06 AM GMT

LANGUAGE - TAMIL
-
பேரணியில் பங்கேற்றவர்களுக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல்!

பேரணியில் பங்கேற்றவர்களுக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல்!


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையிலான போராட்டத்தினை முன்னெடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் போராட்டத்தை முன்னெடுத்த பிரமுகர்களுக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முல்லைத்தீவு மாவட்டப் பிரதேச பொலிஸ் நிலையங்களினால் B அறிக்கையின் அடிப்படையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், சமூகப் பிரநிதிகள், மதத் தலைவர்கள் என பெருமளவானோருக்கு எதிராக குறித்த மனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

போராட்டத்திற்கு முன்பாக பொலிஸாரால் குற்றம் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட AR அறிக்கையின் அடிப்படையிலான வழக்குகள் மீளப் பெறப்பட்டே புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி வரையில் குறித்த வழக்கினை ஒத்திவைப்பதாக நீதிபதி லெனின்குமார் அறிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE