இயற்கை முறையில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை இன்று அறுவடை செய்யப்பட்டது. மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தினால் இயற்கை முறை விவசாயம் மற்றும் பாரம்பரிய விதை தானியங்களை பாதுகாக்கும் நோக்குடன் செய்கை அறிமுகம் செய்யப்பட்டது.
அதற்கு அமைவாக கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரியாலை நாகபடுவான் பகுதியில் அந்த நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட பெண்கள் சிறு குருக்கள் ஊடாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
குறித்த குழுவினால் அழிவடைந்துவரும் மற்றும் அப்பிரதேசத்திற்கு ஏற்றதான "பச்சைப்பெருமாள்" எனும் நெல்லினம் 5 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்டது. குறித்த செய்கை பண்ணப்பட்ட நெல்லினத்தின் விளைச்சல் இன்று அறுவடை செய்யப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது அறுவடை செய்யப்பட்ட நெல்லினத்திலிருந்து பொங்கலும் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி