Tuesday 16th of April 2024 02:20:59 AM GMT

LANGUAGE - TAMIL
.
பொறுப்புக்கூறல் கடமையில் இருந்து இலங்கையைத் தப்பவிடாது பிரிட்டன்! அந்நாட்டுத் தூதுவர் திட்டவட்டம்!

பொறுப்புக்கூறல் கடமையில் இருந்து இலங்கையைத் தப்பவிடாது பிரிட்டன்! அந்நாட்டுத் தூதுவர் திட்டவட்டம்!


"ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரின்போது, இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் நடவடிக்கைகளைப் பிரிட்டன் இம்முறை புதிய பிரேரணை ஊடாக முன்னெடுக்கும். பொறுப்புக்கூறல் கடமையில் இருந்து இலங்கை ஒருபோதும் நழுவ முடியாது."

- இவ்வாறு இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் தெரிவித்தார்.

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவரின் அழைப்புக்கிணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கொழும்பில் நேற்று அவரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கை அரசின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் விதமாகத் தயாரிக்கப்படும் புதிய வரைபு தொடர்பில், தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்படுகின்றது எனவும் சுமந்திரன் எம்.பியிடம் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜெனிவா விவகாரங்கள், இலங்கை அரசின் தற்போதைய செயற்பாடுகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன என்று சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டார்.


Category: செய்திகள், புதிது
Tags: ம.ஆ.சுமந்திரன், இங்கிலாந்து, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE