அமைச்சர் சரத் வீரசேகர என்மீது சட்ட நடவடிக்கையை கட்டாயமாக எடுக்கட்டும். அது குறித்து நீதிமன்றத்தில் சந்திப்போமென, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணியை ஆதரித்து பங்குபற்றியது உள்ளிட்ட விடயங்களுக்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக சரத்வீரசேகர தெரிவித்துள்ளமை குறித்து பதிலளிக்கும் போது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் பா.உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இது குறித்து யாழ்ப்பாணத்தில் வைத்து ஊட்கவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சரத் வீரசேகர சட்ட நடவடிக்கை எடுத்தால் தான் அதை வரவேற்பதாகவும், இதன்மூலம் பிரச்சினைகளை வெளியில் கொண்டுவரக்கூடிய ஒரு சந்தர்ப்பம் தங்களுக்கு ஏற்படுமென்றும் அவர் கூறியுள்ளார்.
ஏன்னென்றால், தான் இதுவரையில் எடுத்திருக்கும் அத்தனை நடவடிக்கைகளும் ஜனநாயகத்திற்கு உட்பட்டவையே எனவும், வெறுமனே அவர்கள் நினைத்ததுபோன்று தங்களைக் குற்றம்சாட்ட முடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சட்ட நடவடிக்கையை கட்டாயமாக எடுக்கட்டும் நீதிமன்றத்திலே அவற்றைச் சந்திப்போமென அவர் மேலும் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: க.வி.விக்னேஸ்வரன், இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்