தமிழர் தேசிய முன்னணி தலைவரும் ஈழத் தமிழர் தீவிர ஆதரவாளருமான பழ.நெடுமாறன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனார்.
அவருக்கு லேசான காய்ச்சல், சளி இருந்ததால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவரிடம் மாதிரிகளை பெறப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது ராஜீவ்காந்தி அரச மருத்துவமனையில் பழ.நெடுமாறன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பழ.நெடுமாறன் உடல்நிலை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கேட்டறிந்து வருகின்றனர்.