Monday 15th of April 2024 11:41:07 PM GMT

LANGUAGE - TAMIL
.
இங்கிலாந்துக்கு எதிராக ரோஹித் சர்மா 161: சென்னை டெஸ்ட்டில் இந்தியா 300 ஓட்டங்கள் குவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிராக ரோஹித் சர்மா 161: சென்னை டெஸ்ட்டில் இந்தியா 300 ஓட்டங்கள் குவிப்பு!


சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் ஆரம்பமாகியுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 161 ஓட்டங்களை குவித்துள்ளதன் மூலம் 300 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது இந்திய அணி.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஆரம்பமாகியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் ஹில் ஆகிய இருவரும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய நிலையில் 3 பந்துகளை எதிர்கொண்டிருந்த நிலையில் ஓட்டமெதனையும் பெறாது சுப்மன் ஹில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த புஜார 21 ஓட்டங்களுடனும், விராட் ஹோலி ஓட்டமெதனையும் பெறாதும் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 161 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ரஹானே 67 ஓட்டங்களையும், அஸ்வின் 13 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க இன்றைய முதல் நாள் ஆட்ட நேர நிறைவில் 88 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றுள்ளது இந்திய அணி.


Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இலங்கை, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE