Tuesday 16th of April 2024 12:03:40 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகேந்திரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகேந்திரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!


கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகேந்திர புரம் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

நாகேந்திரம் பகுதியில் நெல் அறுவடைக்கு சென்ற இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் 06ம் யூனிட் சிவிற் சென்ரர் வட்டக்கச்சி 37 வயதுடைய சிங்காரவேல் மனோகரன் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் நெல் அறுவடைக்காக குறித்த பகுதியில் சென்றிருந்ததாகவும், அதை முடித்துக்கொண்டு நேற்றையதினம் இரவு குளிக்கச் சென்ற நிலையில் காணவில்லை என தேடி வந்தனர்.

அவர் கொண்டு சென்ற ஆடை மற்றும் சவற்காரம் ஆகியன கிணற்றருகில் இருந்ததை அவதானித்தவர்கள் உடனடியாகவே போலீசார் மற்றும் அயலவர்களுக்கு தகவல்களை வழங்கியதுடன், குறித்த நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மேற்படி இளைஞர் கிணற்றில் இருந்து சடலமாக கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE