Thursday 28th of March 2024 02:00:47 PM GMT

LANGUAGE - TAMIL
-
விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் புதிய பணிப்பாளர் பதவி ஏற்பு!

விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் புதிய பணிப்பாளர் பதவி ஏற்பு!


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் புதிய பணிப்பாளராக கலாநிதி லோரன்ஸ் பாரதி கெனடி இன்று (15) தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வுகளில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் திருமலை வளாகத்தின் பணிப்பாளர் கனகசிங்கம், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமுலை வளாகத்தின் கலை கலாசார பீடத் தலைவர் கெனடி, முன்னாள் பதில் பணிப்பாளர் அம்மன் கிளி முருகு தாஸ், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தர் மகராஜ் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பிரதிப் பதிவாளர் விஜயகுமார் மற்றும் பல்கழைக்கழக விரிவுரையாளர்கள் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களென பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது இராம கிருஸ்ணமிசனுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் நிறுவகத்தில் சுவாமி விபுலானந்தரின் சிலைக்கு மலர் மாலையணிவிக்கப்பட்டதை தொடர்ந்து தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து புதிய பணிப்பாளரை வரவேற்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE