பல நாட்கள் கடலில் தங்கியிருந்து மீன் பிடித் தொழிலை மேற்கொள்ளும் வகையில் ஆழ்கடல் தொழிலுக்கு சென்ற திருகோணமலையைச் சேர்ந்த ஏழு மீனவர்களைக் காணவில்லை என உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்காக சென்ற 7 மீனவர்களே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாகர குமார - 4 என்ற பல நாள் படகில், கடந்த 26 ஆம் திகதி அவர்கள் கடற்தொழிலுக்கு சென்றிருந்த நிலையில், தற்போதுவரையில் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 7 மீனவர்களும், மாரவில மற்றும் பருதெல்பொல முதலான பகுதிகளை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களாவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை