Friday 29th of March 2024 02:21:16 AM GMT

LANGUAGE - TAMIL
கோப்பு படம்!
ஆழ்கடல் தொழிலுக்கு சென்ற திருகோணமலை மீனவர்கள் எழுவரை காணவில்லை!

ஆழ்கடல் தொழிலுக்கு சென்ற திருகோணமலை மீனவர்கள் எழுவரை காணவில்லை!


பல நாட்கள் கடலில் தங்கியிருந்து மீன் பிடித் தொழிலை மேற்கொள்ளும் வகையில் ஆழ்கடல் தொழிலுக்கு சென்ற திருகோணமலையைச் சேர்ந்த ஏழு மீனவர்களைக் காணவில்லை என உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்காக சென்ற 7 மீனவர்களே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாகர குமார - 4 என்ற பல நாள் படகில், கடந்த 26 ஆம் திகதி அவர்கள் கடற்தொழிலுக்கு சென்றிருந்த நிலையில், தற்போதுவரையில் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 7 மீனவர்களும், மாரவில மற்றும் பருதெல்பொல முதலான பகுதிகளை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களாவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE