Wednesday 24th of April 2024 03:52:41 PM GMT

LANGUAGE - TAMIL
.
கிளிநொச்சி: ஏ-9 வீதியில் கனரக வாகனங்கள் மோதி விபத்து! அதிகாலையில் சம்பவம்!

கிளிநொச்சி: ஏ-9 வீதியில் கனரக வாகனங்கள் மோதி விபத்து! அதிகாலையில் சம்பவம்!


ஏ-9 வீதியில் பயணித்த கனரக வாகனம் ஒன்று வீதியோரத்தில் தரித்து நின்ற பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் கிளிநொச்சி நகரில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி நகரில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் ஏ-9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியின் பின்பகுதியில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நெல் ஏற்றி சென்ற பார ஊர்தியின் சாரதி துயில்வதற்காக வீதியின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில் யாழிலிருந்து தெற்கு நோக்கி பயணித்த மற்றுமொரு பார ஊர்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதியுள்ளது.

குறிதத் விபத்தில் மோதிய பார ஊர்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சாரதி சிறு காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE