Friday 19th of April 2024 12:26:51 PM GMT

LANGUAGE - TAMIL
-
அம்பாறையில் நிலநடுக்கம்!

அம்பாறையில் நிலநடுக்கம்!


அம்பாறை – பாணம கடலோரப் பிரதேசத்தில் இன்று முற்பகல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இன்று முற்பகல் 11.14 அளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கமானது 4.0 ரிச்டர் அளவில் பதிவாகியிப்பதாக புவிச்சரிதவியல் ஆய்வுப் பணியம் தெரிவிக்கின்றது. கும்புக்கன் ஓயா கடலில் சேர்கின்ற பகுதியிலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் இது 10 கிலோ மீட்டர் கடல் ஆழத்தில் நிலைகொண்டிருப்பதாகவும் அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பொத்துவில் – சர்வோதயபுரம், சின்னஊறணி, ஜலால்தீன் சதுக்கம், களப்புகட்டு ஆகிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.இலங்கையில் கடந்த ஒருவருடக் காலப்பகுதிக்குள் மாத்திரம் 10ற்கும் மேற்பட்ட நிலஅதிர்வு சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. அதில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கமே அதிக சக்திவாய்ந்ததாக கருதப்படுகின்றது. எவ்வாறாயினும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, அம்பாறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE