Friday 19th of April 2024 01:37:10 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஐம்பதாயிரத்தை கடந்தது மேல்மாகாணத் தொற்று!

ஐம்பதாயிரத்தை கடந்தது மேல்மாகாணத் தொற்று!


மேல் மாகாணத்தில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொவிட்-19 இரண்டாவது அலை ஆரம்பமானதை தொடர்ந்து இதுவரை மேல் மாகாணத்தில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிககை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

நேற்றைய தினம் (பெப்-18) மேல் மாகாணத்தில் 225 தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து மேல் மாகாணத்தில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 181 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் 28 ஆயிரத்து 440 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 15 ஆயிரத்து 759 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 5 ஆயிரத்து 982 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய மாகாணத்தில் 6 ஆயிரத்து 216 தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் அதில் கண்டி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 597 தொற்றாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 864 தொற்றாளர்களும் மற்றும் நுவரெலியாவில் 755 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

தென் மாகாணத்தில் 3 ஆயிரத்து 648 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 3 ஆயிரத்து 182 பேரும், கிழக்கு மாகாணத்தில் 2 ஆயிரத்து 186 பேரும் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE