ஆரோக்கியமான கர்ப்பிணிப் பெண்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் செயல்திறன் கொண்டதா? என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வுகளை பைசர் மற்றும் பயோஎன்டெக் தொடங்கியுள்ளது.
4,000 தன்னார்வலர்களின் பங்கேற்புடன் சா்வதேச ரீதியில் இது குறித்த ஆய்வை தொடங்கியுள்ளதாக பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.
இந்நிலையில் பாதுகாப்பானதா? என உறுதி செய்யப்படாவிட்டாலும் கூட சில முன்கள பணிகளில் ஈடுபடும் கர்ப்பவதி பெண்களை தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அமெரிக்காவில் சில பொது சுகாதார அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர்.
இந்நிலையில் தனது ஆய்வின் பிரகாரம் கா்ப்பவதி பெண்களுக்கு பைசர் தடுப்பூசி பாதுகாப்பானதா? என்பதற்கான ஆய்வு முடிவுகளை இவ்வாண்டு இறுதியில் பெற முடியும் என பைசர் தடுப்பூசி மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவர் டாக்டர் வில்லியம் க்ரூபர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்படும் கர்ப்பவதி பெண்கள் ஏனையவர்களை விட கடுமையான அறிகுறிகளைக் கொண்டிருக்கதாக தரவுகள் தெரிவிப்பதாகவும் க்ரூபர் கூறினார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்படும் பெண்கள் உரிய காலத்துக்கு முன்னர் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது போன்ற சிக்கல்களும் அதிகம் காணப்படுவதாகவும் அவா் தெரிவித்தார்.