Wednesday 24th of April 2024 05:06:21 PM GMT

LANGUAGE - TAMIL
-
மெக்ஸிக்கோவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள  அகதிகளை அழைத்துவர அமெரிக்கா திட்டம்!

மெக்ஸிக்கோவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளை அழைத்துவர அமெரிக்கா திட்டம்!


அமெரிக்காவில் புகலிடம் கோரி மெக்ஸிக்கோ எல்லை ஊடாக நுழைவோரை மெக்ஸிக்கோவில் தடுத்துவைக்கும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் முன்வந்துள்ளது.

அமெரிக்காவுக்குள் நுழைய முயன்று தற்போது மெக்ஸிக்கோவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை நாட்டுக்குள் அழைத்துவருவதற்கான விமான சேவைகளுக்கு நிதி உதவி அளிக்க அமெரிக்கா அரசு முன்வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் ஐ.நா.வும் கூட்டிணைந்து புலம்பெயர்ந்தோரின் இருப்பிடங்கள் மற்றும் அவர்களை அழைத்து வருவதற்கான விமான செலவுகள் உள்ளிட்டவை குறித்து தற்போது மதிப்பீடு செய்து வருகின்றன.

எனினும் இது தொடர்பில் இதுவரை இந்த இறுதி முடிவுக்கும் வரவில்லை என ஐ.நா. இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் மெக்ஸிக்கோ தலைவர் டானா கிராபர் லடெக் கூறினார்.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE