கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் காட்டு யானைகளின் தொல்லைகளால் தமது நெற் செய்கைகளை பாதுகாத்துக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் குறித்த பகுதிக்கு யானை வேலிகள் அமைத்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய கிராமங்களில் ஒன்றாக காணப்படுகின்ற வன்னேரிக் குளம் கிராமத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கால போக செய்கைகளை காட்டு யானைகள் தொடர்ச்சியாக அழித்து வருவதாகவும் இந்த அழிவுகளிலிருந்து தங்களுடைய பயிர்களைப் பாதுகாத்து கொள்வதற்காக தொடர்ச்சியாக காவல் கடமைகளில் ஈடுபட வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பயிர் செய்கை மேற்கொள்ளப்படும் போது 15 நாட்களுக்கு பின்னர் அறுவடை செய்ய வேண்டிய காலம் வரை தொடர்ச்சியாக அவர்களுடைய பயிர்களை பாதுகாக்க வேண்டி இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர் குறிப்பாக இந்த பிரதேசத்துக்கு யானை வேலிகளை அமைத்து தருமாறு இந்த பகுதி விவசாயிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே தங்களுடைய வாழ்வாதாரமான விவசாயத்தை மேற்கொள்ளும் வகையில் அதனை பாதுகாத்துக் கொள்வதற்கான வேலிகளை அமைத்து தருமாறு அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி