Saturday 20th of April 2024 04:13:35 AM GMT

LANGUAGE - TAMIL
-
மல்லாவி யோகபுரம் ம.வி. மாணவனுக்கு கொரோனா!

மல்லாவி யோகபுரம் ம.வி. மாணவனுக்கு கொரோனா!


முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி யோகபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,

மரண வீடு ஒன்றில் பங்குகொண்டதாகவும் குறித்த மரண வீட்டிற்கு வெளி மாவட்டத்தினைச் சேர்ந்த பலர் வந்து திரும்பியதாகவும் தெரியவந்ததாகவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,

குறித்த மரண வீட்டில் பங்குகொண்ட ஏனையவர்கள் மற்றும் பாடசாலையில் மாணவனுடன் நெருக்கமாக பழகியவர்கள் உட்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படக்கூடும் என்று சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE